செய்திகள் :

மாங்கொட்டையில் விநாயகர் உருவம்; வண்ணங்களுக்கு பூக்களின் சாறு... அசத்தும் நீலகிரி பெண்!

post image

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாடு முழுவதும் சிறப்பு விழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

விதைகளில் விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகளை பாதுகாக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட இருக்கும் இந்த விநாயகர் சிலைகளில் ரசாயன பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள எருமாடு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சங்கீதா, களிமண், விதைகள் , பூக்களின் சாறு போன்றவற்றைக் கொண்டு இயற்கை முறையில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார். சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவர் உருவாக்கி வரும் விநாயகர் சிலைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

விதைகளில் விநாயகர் சிலைகள்

இது குறித்து தெரிவித்த சங்கீதா , " சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் மட்டுமின்றி பல்வேறு விதைகளையும் பயன்படுத்தி சிலைகளை செய்து வருகிறேன். குறிப்பாக வெட்டி வேர், வடு மாங்கொட்டைகளைக் கொண்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்து அதன் மீது களிமண் கலவையைக் கொண்டு பூசுகிறேன். வண்ணங்களுக்காக பூக்களின் சாற்றைப் பயன்படுத்துகிறேன். மேலும் இதில் பல விதைகளையும் சேர்க்கிறேன். ஒரு சிலையில் இருந்து ஒன்றிரண்டு விதைகள் முளைத்தால் கூட மகிழ்ச்சி தான் " என்றார்.

Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!

ஆக்ரோஷமானது; குரூரமானது என்று பெயர் வாங்கிய கழுதைப்புலியின் பிரசவம்தான், பாலூட்டிகளிலேயே மிகவும் வலி மிகுந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். சிலர், ஒரு பெண் கழுதைப்புலியின் பிரசவம் என்பது வாழ்வா, சாவா ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்; விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய மாணவிகள் | Photo Album

விநாயக சதுர்த்தி: விநாயகரின் சக்தி மிகுந்த 8-வது வடிவம்; வாழ்வில் உச்சம் தொடவைக்கும் உச்சிஷ்ட கணபதி!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

தாயுடன் இணைவைத் தடுக்க திமிங்கிலத்துக்கு பாலியல் தூண்டல் – Marineland பூங்காவில் நடப்பது என்ன?

பிரான்ஸில் உள்ள மரின்லேண்ட் ஆன்டிப்ஸ் கடல் உயிரியல் பூங்கா கடந்த ஜனவரியில் மூடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரண்டு கில்லர் திமிங்கலங்களான விக்கி (24) மற்றும் கெய்ஜோ (11) ஆகியவற்றை புதிய இடத்திற்கு ... மேலும் பார்க்க

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட ஆசிய நீர்பறவைகள்; வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன?

சென்னையின் பறவை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட ஓரியண்டல் டார்ட்டர் (ஒருவகை நீர்பறவை) பறவைகள் கூடியுள்ளன. பாம்பு போ... மேலும் பார்க்க