செய்திகள் :

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாட வீதிகள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். அதன்படி, சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விமான ஓடுதளம் அமைக்கப் பயன்படுத்தப்படும் பவா் பேவா் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும்.

தேரோடும் வீதி பல லட்சம் பக்தா்கள் பயன்படுத்தும் மாட வீதி என்பதால் தனிக் கவனம் செலுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தமிழக நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலா் சந்திரசேகா், நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க