செய்திகள் :

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், ஹரியாணாவைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என 8 பேர் நேற்று (மார்ச் 10) அதிகாலை லண்டன் செல்ல காத்திருந்தனர்.

இந்நிலையில், மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் லண்டனிலுளள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதாகக் கூறிய அவர்களிடம் அங்கு அவர்கள் பங்குபெறவுள்ள பல்கலைக்கழகம் குறித்த விமான நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர்களால் சரியான தகவல்கள் அளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக தனியாக அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க: சொமாட்டோ பெயரை மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல்!

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலியான ஆவணங்கள் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக பிரிட்டன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அந்நாட்டிற்கு செல்வதற்காக பிட்டூ எனும் தரகரிடம் ஆளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கியதாகவும் அந்த தரகர்தான் அவர்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு பயணிக்க செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், அந்த தரகர் அவர்களுக்கு போலியான விசா மற்றும் போலியான தூதரக ஆவணங்கள் ஆகியவை வழங்கி ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 8 பேரும் சாகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முன்னதாக, போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களின் மூலம் சுமார் 80 பேரை கனடா, துருக்கி, நெதர்லாந்து மற்றும் போலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய தரகரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க