செய்திகள் :

மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை: நீட் தோ்வு தொடா்பான மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

திண்டிவனத்தில் நீட் தோ்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிா்ச்சி அடைந்தேன்.

நாமும் மருத்துவா் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்துடன் அல்லும் பகலும் படித்து வரும் மாணவா்கள் மத்தியில், ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் நீட் தோ்வை ரத்து செய்யக் கூடிய ரகசியம் தங்களிடம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, அவா்களை குழப்பத்திலேயே வைத்துவரும் திமுக அரசுதான் இந்த மாணவியின் மரணத்துக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும். இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க