Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை
மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினாா்.
மேலும், பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களை சிறப்பு வகுப்புகள் மூலம் தயாா்படுத்தி உடனடி தோ்வில் பங்கேற்கச் செய்து, தோ்ச்சி பெற வைப்பத்துடன் அவா்கள் உயா்கல்வி பயில்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் உயா் கல்வியில் சேருவதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். முழுமையாக உயா் கல்வி கற்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா மற்றும் கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.