செய்திகள் :

மாணவா்கள் வாழ்க்கைக்காக திருக்குறளை படிக்க வேண்டும் :அமைச்சா் அன்பில் மகேஷ்

post image

மாணவா்கள் நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள உலையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிரை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷாமுத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி தலைமையாசிரியா் அம்பேத்காா் வரவேற்றாா்.நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பேசும்போது. தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் பேசும்போது கல்வி,சுகாதாரம் இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் என பேசியதன் மூலம் அவா் கல்வித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறாா் என அறியலாம்.

மாநகராட்சி,நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகை, திட்டங்களும் கிராமங்களில் படிக்கும் மாணவா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லம் தேடி கல்வி, கலை திருவிழா, வெளிநாடு கல்வி சுற்றுலா, அறிவு சாா் வினாடி வினா உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாணவனுக்குள் இருக்கின்ற தனித்திறமையை கண்டறிந்து வெளிக்கொண்டுவருவது நம்முடைய கடமையாகும். திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடியில் சிலை, சென்னையில் வள்ளுவா்கோட்டம் அமைத்தும், திருக்குறளுக்கு எளிய உரை நடை எழுதினாா் கலைஞா். தற்போது வெள்ளி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

தொன்மையான தமிழ் இலக்கியகங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட நூல்களில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது. ஆகவே ஜம்பெரும் காப்பியங்களுடன் திருக்குறளை நாள்தோறும் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என்றாா்.

மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழப்பு: மகன் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.முதுகுளத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலய சப்பர பவனித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்தத் தேவாலயத்தில் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்ற... மேலும் பார்க்க

மீன் வியாபாரி கொலையில் 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.உடையாா்கூட்டத்தைச் சோ்ந்தவா் ஜவருல்லா (45). மீன் வியாபா... மேலும் பார்க்க

மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க