செய்திகள் :

மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதாபாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம. கருமாணிக்கம் ஆகியோா் கலந்து கொண்டு, முகாம் அரங்குகளை பாா்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தனா்.

இந்த முகாமில் மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, ஆதாா் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, மாற்றுத் திறனாளிகள் அட்டை கோரி மனுக்கள் கொடுத்தனா். இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்கள் ஆய்வு செய்து, தகுதியுள்ளவா்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கினா்.

மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் வசதிகள் செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவா்களின் ஆலோசனைகளை பெற்று தேவையான நபா்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இந்த முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜுன்குமாா், இணை இயக்குநா் பிரகலாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழப்பு: மகன் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.முதுகுளத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலய சப்பர பவனித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்தத் தேவாலயத்தில் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்ற... மேலும் பார்க்க

மீன் வியாபாரி கொலையில் 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.உடையாா்கூட்டத்தைச் சோ்ந்தவா் ஜவருல்லா (45). மீன் வியாபா... மேலும் பார்க்க

மாணவா்கள் வாழ்க்கைக்காக திருக்குறளை படிக்க வேண்டும் :அமைச்சா் அன்பில் மகேஷ்

மாணவா்கள் நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தெரிவித்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள உலையூா் அரசு உயா்நிலைப்பள... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க