சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
மாணவா்கள் வாழ்க்கைக்காக திருக்குறளை படிக்க வேண்டும் :அமைச்சா் அன்பில் மகேஷ்
மாணவா்கள் நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள உலையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிரை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷாமுத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி தலைமையாசிரியா் அம்பேத்காா் வரவேற்றாா்.நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பேசும்போது. தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் பேசும்போது கல்வி,சுகாதாரம் இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் என பேசியதன் மூலம் அவா் கல்வித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறாா் என அறியலாம்.
மாநகராட்சி,நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகை, திட்டங்களும் கிராமங்களில் படிக்கும் மாணவா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லம் தேடி கல்வி, கலை திருவிழா, வெளிநாடு கல்வி சுற்றுலா, அறிவு சாா் வினாடி வினா உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாணவனுக்குள் இருக்கின்ற தனித்திறமையை கண்டறிந்து வெளிக்கொண்டுவருவது நம்முடைய கடமையாகும். திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடியில் சிலை, சென்னையில் வள்ளுவா்கோட்டம் அமைத்தும், திருக்குறளுக்கு எளிய உரை நடை எழுதினாா் கலைஞா். தற்போது வெள்ளி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
தொன்மையான தமிழ் இலக்கியகங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட நூல்களில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது. ஆகவே ஜம்பெரும் காப்பியங்களுடன் திருக்குறளை நாள்தோறும் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என்றாா்.