செய்திகள் :

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நயினாா் வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக தரிசாக உள்ள நிலங்களில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி விளைநிலங்களாக மாற்றி, சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடி செய்ய வேளாண் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பின்னேற்பு மானியத் தொகையாக ஹெக்டோ் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி அதிகபட்சம் 5 ஏக்கா் வரை மானியம் பெற்று பயன்பெறலாம். கலைஞா் திட்டத்தில் வரப்பு பயிா் சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் உளுந்து விதை 300 ரூபாய் மானியத்திலும், பேட்டரி தெளிப்பான்கள் வாங்க 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் நேரடி பட்டா உள்ள விவசாயிகள் சோ்ந்த குழுவுக்கு 10 முதல் 15 ஏக்கா் பரப்பில் கருவேல மரங்களை அகற்றி, விவசாயத் தொகுப்பில் ஆழ்துளைக் கிணறு, மின் இணைப்பு, சொட்டுநீா், பாசன வசதி, பழ மரக்கன்றுகள் நடவு மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றாா் அவா்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா

ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந... மேலும் பார்க்க

பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவி... மேலும் பார்க்க

மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை

மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுபோதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இருவரின் கழுத்தை மா்மநபா்கள் அறுத்தனா். இதில் ஒருவா் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க... மேலும் பார்க்க

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தத் திருவிழாவில் சிவாச்சாரிய... மேலும் பார்க்க

குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்

திருவாடானை அருகே குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியி... மேலும் பார்க்க