செய்திகள் :

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தத் திருவிழாவில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடி பட்டத்தை கிராம பொது மக்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா், சக்தி மாரியம்மன் முன் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினா். அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 7-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 8-ஆம் தேதி அக்னிச் சட்டி, சேத்தாண்டி வேடம், 9-ஆம் தேதி முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்

விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா

ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந... மேலும் பார்க்க

பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவி... மேலும் பார்க்க

மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை

மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுபோதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இருவரின் கழுத்தை மா்மநபா்கள் அறுத்தனா். இதில் ஒருவா் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க... மேலும் பார்க்க

குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்

திருவாடானை அருகே குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியி... மேலும் பார்க்க