செய்திகள் :

மாதா அமிர்தானந்தமயிக்கு கேரள அரசு கௌரவம்!

post image

ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேரள மொழியான மலையாளத்தில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசினை அளித்தது.

அம்மா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமிர்தவர்ஷம் 72 என்ற பெயரில் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, கேரளத்திலுள்ள அமிர்தபுரியில் அமிர்த விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாதா அமிர்தானந்தமயியைப் பெருமைப்படுத்தும் வகையில் கேரள மாநில அரசின் சார்பில் பாராட்டுப் பத்திரத்தை கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் சுவாமி அமிர்தஸ்வரூபானந்த புரி தலைமை தாங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் சஜி செரியன், மலையாள மொழியின் பலத்தையும், கேரள மாநில கலாசாரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியவர் அம்மா. சர்வதேச அரங்கில், மலையாளத்தில் அம்மா உரையாற்றியது, தங்களது சொந்த தாய் மொழியை அலட்சியம் செய்பவர்களுக்கான சக்திவாய்ந்த செய்தியாக அமைந்திருந்தது. இது வெறும் பாராட்டு விழா மட்டுமல்ல, இது கலாசார விழிப்புணர்வு. இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார்' என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் அவையில் மலையாளம் ஒலித்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கரவொலிகளால் அதற்கு பதிலளித்தனர் என ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முறையாக கேரளத்தின் குரல் ஒலித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

ஐ.நா. அவையில் உரையாற்றிய அமிர்தானந்த மயி, தனக்குக் கிடைத்த கௌரவத்தை மலையாள மொழிக்கே அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டிருந்தார். "எனக்கு இங்கு கிடைத்திருக்கும் பெருமையை மலையாள மொழிக்கே அர்ப்பணிக்கிறேன், அதுதான் எங்களுக்கு அடையாளத்தையும் வடிவத்தையும் கொடுத்தது. பெற்றோர் அனைவரும், தங்களது பிள்ளைகள், அவர்களது தாய் மொழியைப் பாதுகாக்கவும், பெருமைப்படவும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ சிஆர் மகேஷ், உமா தாமஸ் ஆகியோரும் உரையாற்றினர். பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், காவல்துறை ஐ.ஜி. லட்சுமணன், கேரள சட்ட மைய இயக்குநர் நாகராஜ் நாராயணன், நடிகர் தேவன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிறைவாக சுவாமினி சுவித்யாமிருத பிராணா நன்றியுரை ஆற்றினார்.

The Kerala government on Friday honoured Mata Amritanandamayi during the silver jubilee observance of her address in Malayalam at the United Nations General Assembly Hall.

இதையும் படிக்க... எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பி... மேலும் பார்க்க

பாஜக அமைச்சர் மீது முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர அமைச்சர் ஜெயகுமார் ராவல், தங்களது பாரம்பரிய நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தில், கொய்மெண்டா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியி... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

மத்திய பிரதேசத்தில் தாயின் கண்முன்னே அவரது மகனின் தலையைத் துண்டித்த மனநலம் பாதித்தவரின் வெறிச்செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் காலு சிங் என்பவரின் வீட்டுக்க... மேலும் பார்க்க

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்... மேலும் பார்க்க