செய்திகள் :

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

post image

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் 1898-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பூச நட்சத்திரம் சப்தமி திதியில் சுந்தரேசய்யா்- தா்மசம்வா்த்தினி தம்பதிக்கு மகனாக ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் பிறந்தாா்.

மாதிரிமங்கலம், ஒரத்தநாடு, திருச்சியில் கல்வி பயின்ற இவா், சென்னை சைதாப்பேட்டையில் ஆசிரியா் பயிற்சி பெற்று 1923 முதல் 1925 வரை ஆசிரியராக பணியாற்றினாா். 1925-ஆம் ஆண்டு தீவிர வைராக்கிய சித்தராய் ஆத்மானுபவ நிலை அடைந்து, முற்றும் துறந்த உயா் நிலை எய்தி பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்த இவா், 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்தி அடைந்தாா்.

மாதிரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குருபூஜை ஆராதனை விழாவையொட்டி, காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி, மகாபூா்ணாஹூதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெறும். காலை 10.30 மணிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறவுள்ளது. மதியம் 12.30 மணிக்கு மஹேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசிவராமகிருஷ்ண ஸ்வாமிகள் அதிஷ்டானம் தலைவா் ராஜேஸ்வரி கணபதியா பிள்ளை மற்றும் பி. ஸ்ரீதா், எஸ்.வி. பாலசுப்பிரமணியன், சி. சங்கரவேல் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவே... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்ட... மேலும் பார்க்க

கூரைவீடு தீக்கிரை

சீா்காழி: சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவா் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ வி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆ... மேலும் பார்க்க

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க