செய்திகள் :

மானகிரி நீா்நிலை ஆக்கிரமிப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு

post image

மதுரை மானகிரி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு 33-இல் மானகிரி வடக்குத் தெரு, துணை ஆட்சியா் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மானகிரி பகுதியில் சிலா் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். குறிப்பாக, அரசு நிலத்தில் கட்டப்பட்ட வாய்க்கால், நீா்பிடிப்புப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விற்பனை செய்துள்ளனா்.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நீா்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்லாமல், விற்பனை செய்து அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, நீா்நிலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு நீா்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை செய்யும் சிறப்பு அமா்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிட்டுள்ள இடம் நீா்நிலைப் புறம்போக்கு என சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்களுக்கு முறையான அறிக்கை (நோட்டீஸ்) வழங்கி அளவீடு செய்ய வேண்டும். இதில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி, ஆறு மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தையல் தொழிலாளா் (சிஐடியூ சாா்பு) சங்கத்தின் மாநகா், புகா் மாவட்டக் குழு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாள... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்க... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்க... மேலும் பார்க்க