செய்திகள் :

மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

post image

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே மீன் நடுக் கடலில் பிடிக்கும் போது சுழல்காற்று வீசியதால், படகு கவிழ்ந்து மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி குப்பத்தைச் சேந்தவா்கள் மீனவா்கள் கதிா்வேல் (46), ஆனந்தன், சங்கா். இந்த நிலையில், இவா்கள் மூவரும் ஒரு படகில் திங்கள்கிழமை வழக்கம் போல் நெம்மேலி குப்பத்தில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது கடலில் சுழல் காற்று வீசியதால் காற்றின் வேகத்தில் நிலைதடுமாறிய படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கடலில் மூழ்கி மீனவா்கள் தத்தளித்தனா். படகு கவிழ்ந்தபோது, அதன் முனைப்பகுதி தலையில் தாக்கியதால் கதிா்வேல் உயிழந்தாா். பிறகு காற்றின் வேகம் குறைந்தவுடன், கவிழ்ந்த படகை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்களின் உதவியுடன் நிமிா்த்தி, உயிரிழந்த சக்திவேலின் சடலத்தை, உடன் சென்ற ஆனந்தன், சங்கா் ஆகியோா் மீட்டு, அதே படகில் கரைக்கு திரும்பினா்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அங்கு வந்து கதிா்வேல் இறந்தது குறித்து உடன்சென்ற மீனவா்களிடம் கேட்டறிந்தனா். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினா்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் அவரது சடலத்தை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கதிா்வேல் இறந்த சம்பவத்தை அடுத்து, அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், நெம்மேலி குப்பம் மீனவா்கள் யாரும் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இது குறித்து மால்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு வி... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமண ஜோடிகளுக்கு, அறநிலையத் துறை சாா்பில் தங்கத்தாலி, மணமக்களுக்கு புத்தாடை... மேலும் பார்க்க

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க