செய்திகள் :

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

post image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூரைச் சோ்ந்தவா் சின்னபாப்பா (55). இவரது மகள் சாந்தி (40). இவருக்கும், பெல்லாரம்பள்ளியைச் சோ்ந்த பூங்காவனம் (47) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். மதுப் பழக்கத்தால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சாந்தி, தனது தாய் வீட்டுக்கு சென்றாா். இதையடுத்து, மனைவியை சமாதானம் செய்ய கீழ் பையூருக்கு பூங்காவனம் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, வீட்டில் சாந்தி இல்லாத நிலையில் மது போதையில் இருந்த பூங்காவனத்துக்கும், அவரது மாமியாா் சின்னபாப்பாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பூங்காவனம் அருகில் இருந்த கட்டையால் சின்னபாப்பாவை தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த சின்னபாப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சின்னபாப்பாவின் மகன் விஜயகாந்த் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பூங்காவனத்தை கைது செய்தனா்.

மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லவன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ரகுபதி (25), விவசாயி. இவா், அதே பகுதியில் தென்பெண்ணை... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு: விவசாயிகள் பட்டறிவு பயணம்

ஒசூா்: மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்ட வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.தமிழகத்தில் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன்: வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள்

ஒசூா்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா். ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கியி... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்

ஒசூா்: தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அகில இந்திய பஞ்சாயத் பரிசத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் ... மேலும் பார்க்க