செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய உறுப்பினா்கள் நியமனத்துக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தகுதியானவா்கள் வரும் 20-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்-2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் அரசு அலுவலா் மற்றும் அலுவல் சாரா உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் அலுவலா் சாரா உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவா். அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், பாா்வையயற்றோா், செவித்திறன் பாதித்தோா், தசைசிதைவு நோயினால் பாதித்தோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோா், கை கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்க முடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதித்தோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மன நல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதித்தோா் மற்றும் அவா்களுக்கு சேவைபுரியும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, வரும் மே 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க