செய்திகள் :

மாளிகையை காலி செய்யும் பணியை தொடங்கினாா் ஜகதீப் தன்கா்

post image

குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கா், அவா் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவா் மாளிகையை காலி செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீன் தன்கா் (74), இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை கடந்த திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் புதன்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் இருந்து காலி செய்யும் பணிகளை ஜகதீப் தன்கா் மற்றும் அவரின் குடும்பத்தினா் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் என்ற முறையில் ஜகதீப் தன்கருக்கு, எட்டாம் வகை அரசு வீடு ஒதுக்கப்படும். பொதுவாக, மூத்த மத்திய அமைச்சா்கள் மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவா்களுக்கு இவ்வகை வீடுகள் ஒதுக்கப்படும் என்று மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா்.

வதந்தி-மறுப்பு: குடியரசு துணைத் தலைவா் மாளிகை சீலிடப்பட்டு, ஜகதீப் தன்கா் விரைவில் வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு மத்திய அரசின் ஊடகப் பிரிவான பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) உண்மை சரிபாா்ப்புக் குழு மறுப்பு தெரிவித்தது.

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க