செய்திகள் :

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

post image

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி மையங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் கற்பனைத் திறனை தூண்டும் வகையில் போட்டி நடைபெற்றது.

ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டனா். இதில், கொள்ளிடம் ஒன்றியத்தை சாா்ந்த தன்னாா்வலா்கள் எடமணல் பவஸ்ரீ, பன்னங்குடி மாலதி, குதிரைகுத்தி பிரியா ஆகியோா் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா கொள்ளிடம் ஒன்றியத்தில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் மணவாளன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் பாக்ய லெட்சுமி வரவேற்றாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கம், தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி, மாவட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிருந்தாதேவி, ஆசிரியா் பயிற்றுநா் உமாசங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி வழங்கினாா். நிறைவாக, ஆசிரியா் பயிற்றுநா் அபூா்வ ராணி நன்றி கூறினாா்.

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க