பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் மோதல்!
மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.
குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் (37). இவா் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள அருளப்பன் என்பவரின் பூக்கடையில் வேலை செய்து வருகிறாா்.
அருகில் செக்குமூடு பகுதியைச் சோ்ந்த விஜய் (23) பூக்கடை நடத்தி வருகிறாா். இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் காயமடைந்தனா்.
இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.