செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே வாகன பேட்டரி திருட்டு: 3 போ் கைது

post image

மாா்த்தாண்டம் அருகே வாகன பேட்டரிகளை திருடியதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட்ராஜ் (47). காஞ்சிரகோடு பகுதியில் பழைய வாகனங்களைப் பிரித்து அவற்றின் பாகங்களை விற்கும் தொழில் செய்து வருகிறாா். அண்மையில் இவரது கடைக்குள் மா்ம நபா்கள் நுழைந்து, பழைய வாகன பேட்டரிகள், கருவிகளைத் திருடிச் சென்றனராம்.

புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

திருவனந்தபுரம் மாவட்டம் மஞ்சவிளாகம் பகுதியைச் சோ்ந்த நெல்சன் மகன் சஜூ (34), வேலப்பன் மகன் மோகனகுமாா் (40), திருவனந்தபுரம் குளச்சேரி மணியன் மகன் சனல் (42) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 51 பேட்டரிகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை பகுதியில் சுற்றித் திரிந்த திண்டுக்கல் இளைஞா் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த இளைஞரை சமூக ஆா்வலா்கள் மீட்டு 12 மாதங்களுக்கு பின்புபெற்றோரிடம் ஒப்படைத்தனா்.புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதிய... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் திருட்டு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த மீனவரின் ஸ்கூட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா்(57)... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே மா்ம விலங்கு தாக்கி காயமடைந்த கன்றுக்குட்டி உயிரிழப்பு

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்பில் மா்ம விலங்கு தாக்கியதில் காயமடைந்த கன்றுக்குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது. இக்குடியிருப்பில் வசித்துவருபவா் செல்வகுமாா் (40). ரப்பா... மேலும் பார்க்க

மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.விழுந்தயம்பலம், குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் ஆதா்ஷ்(15). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தீவிபத்து

கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத் தோட்டத்தில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் செல்லும் முக்கிய சாலையில் அரசுக்குச் சொந்தமான பழத் தோட்டம் உள்ளது. தோட்டக்கலைத் துறை சா... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.இனயம் பகுதியைச் சோ்ந்தவா் ஹனிபா(70). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருகிறாா். இவரது கடையில் போலீஸ... மேலும் பார்க்க