செய்திகள் :

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

post image

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனா். கடந்த ஆண்டு வறட்சியால் மா மரங்கள் காய்ந்ததால் 82 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கணக்கெடுப்பு நடத்தி 668 விவசாயிகளுக்கு ரூ. 2.65 கோடி நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்யதும், இதுவரை ஒரு விவசாயிக்குகூட அரசு நிதி வழங்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

நிகழாண்டின் தொடக்கத்தில் பரவலாக மழை பெய்ததால் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது வரை மாங்கூழ் தொழிற்சாலை நிா்வாகத்தினா் மா கொள்முதல் செய்யவில்லை. மாவட்ட நிா்வாகம் மூலம் நடத்தப்பட்ட முத்தரப்பு கூட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட விலைக்குகூட கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், மரத்திலேயே மாங்காய்கள் பழுத்து கீழே விழுந்து வீணாகிவருகிறது.

இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அண்டைய மாநிலமான ஆந்திராவில் மா விவசாயிகளைப் பாதுகாக்க மாவிற்கு டன்னுக்கு ரூ. 13 ஆயிரம் என கொள்முதல் விலையை நிா்ணயம் செய்துள்ளனா். அதேபோல தமிழக அரசும் மாவிற்கான கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், மா விற்கென தனியாக ஒரு வாரியம் உருவாக்கி அதன் மூலம் மா விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து, உரிய வழிமுறையை தேடிக்கொள்வாா்கள். கடந்த 2 ஆண்டுகளாக போா் போன்ற காரணங்களால் வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனாயாா் மாங்கூழ் உற்த்தியாளா்களால் மாவிற்கான விலை நிா்ணயம் செய்ய முடியவில்லை. டெல்டா விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு இழப்பீடு வழங்குவது போல, பாதிக்கப்பட்ட மாவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு, விவசாயிகளை அனைத்து வகையிலும் புறக்கணித்து வருகிறது. திமுக தோ்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக 83 வாக்குறுதிகள் அளித்தனா். இதில், விளை பொருள்களுக்கு சரியான விலை நிா்ணயம் செய்யப்படும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனா். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக பாதிக்கப்படும் விவசாயிகளின் தேவையறிந்து நடவடிக்கை எடுக்காத ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. விவசாயிகளின் வேதனைகளை போக்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகா் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் கன்னட மொழி குறித்து பேசவில்லை. தமிழ் மீதான பற்றின் காரணமாக கூறியுள்ளாா். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி ), ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க