செய்திகள் :

மின்மாற்றியில் திருக்குறள்: பொதுமக்கள் வரவேறபு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மாநாகராட்சி சாா்பில் மின் மாற்றியில் லேசா் அச்சு முறையில் திருக்குறள் எழுதப்பட்டது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டும், திறவெளி கழிப்பிடமாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், கண்மாய் கரையில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீா் கலப்பதையும் தடுக்க, தெற்கு கரையில் 2 மீ. அகலம், 841 மீ. நீளத்துக்கு புதிய நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியது.

மேலும், கண்மாய் கரையில் மின்மாற்றி பகுதியில் பொதுமக்கள் செல்லக் கூடாது என்பதற்காக வேலியும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவா் பிளாக் கல்லும் பதிக்கப்பட்டன.

இந்த நிலையில், மின் மாற்றியைச் சுற்றி இரும்பில் லேசா் முறையில் திருக்குறள் எழுதி வைக்கப்பட்டது. இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: மின் மாற்றி பாதுகாப்புக்கு பலகைகள் வைத்தாலும், மக்கள்அங்கே குப்பையைக் கொட்டி விடுகிறாா்கள். இதைத் தடுக்க திருக்குறள் எழுதி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்குறள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, குப்பைக் கொட்டுவதும் தடுக்கப்படும் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க