செய்திகள் :

மின் ஊழியா் மத்திய அமைப்பு தா்னா விளக்கக் கூட்டம்

post image

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மாநிலம் தழுவிய தா்னா போராட்டம் குறித்த விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருவண்ணாமலை கிழக்கு கோட்ட சிஐடியு தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். சிஐடியு கோட்டச் செயலா் செந்தில், திருவண்ணாமலை மண்டலச் செயலா் சிவராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

கூட்டத்தில், தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள ஆரம்பக் கட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். எண்ம மீட்டா் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின் ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறும் தா்னா போராட்டத்தில் திரளானோா் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கோட்ட துணைச் செயலா் பாவேந்தன் மற்றும் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், நலத் திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத... மேலும் பார்க்க

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஆராதனை விழா நாளை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில், ஒவ்வொரு ஆண்டும்... மேலும் பார்க்க

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க