செய்திகள் :

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

post image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தொழிற்பேட்டை சாலையை அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோா் வேலைக்கும், பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றுக்கும் சென்று வருகின்றனா்.

இந்தப் பகுதியில் அரசு அச்சகம், குடிமைப்பொருள் வழங்கல் துறை, கலால் துறை, வேளாண் துறை அலுவலகங்கள், கூட்டுறவு அரிசி ஆலை, பாசிக், பாப்ஸ்கோ, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மின் துறை அலுவலகம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.

தொழிற்பேட்டை முக்கிய சாலையை காவல் துறை சில நாள்களுக்கு முன்பு இரும்புத் தடுப்புகளால் மூடியதால் மக்கள் சிமத்துக்குள்ளாகினா்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சாலையை அடைத்துள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தொகுதிச் செயலா் தென்னரசன், மாநிலக் குழு உறுப்பினா்கள் முருகன், எழிலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

போராட்டத்தை அடுத்து, சாலைத் தடுப்புகளை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா். பின்னா், மறியலும் கைவிடப்பட்டது.

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் விவகாரத்தில் விரைவில் சுமுக தீா்வு: புதுவை ஆளுநா்

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க