மின் கட்டணச் சலுகை: ‘டயா் ரீட்ரேடிங்’ உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை
மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என ‘டயா் ரீட்ரேடிங்’ உரிமையாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆா்.வரதராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ராஜ்குமாா் கலந்து கொண்டாா். செயலாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் மல்லீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற டயா்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் டயா்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். நாமக்கல் சுற்றுவட்டச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
தமிழக நிதிநிலை அறிக்கையில் டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்களின் கோரிக்கையான மின் கட்டணத்தில் சலுகை (விசைத்தறி உரிமையாளா்களுக்கு வழங்குவது போல) அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத் தலைவா் தா்மலிங்கம், துணை செயலாளா்கள் வெங்கடேஷ், ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.