செய்திகள் :

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

post image

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மின் தடையால் தேர்வெழுதிவதில் சிக்கல்களை சந்தித்ததாகக் கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு (2025) பல்வேறு மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் மிகவும் சிரமப்பட்டனா். இதனால், தங்களுக்கு மறு தோ்வு தேவை என ஆவடி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் சிலர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தோ்வு எழுதியதாகவும், கவனச் சிதறலால் முழு திறமையுடன் தோ்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தோ்வு தேவை எனவும் மாணவா்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரரிக்கப்பட்டு வரும் நிலையில், மறு தேர்வு நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடையும் விதித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மின் தடையால் நீட் தேர்வெழுதுவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால், மறு தேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஜூன் 6ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

நீட் தோ்வின் முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க