செய்திகள் :

மின் தூக்கியிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

post image

சிவகாசியில் மின் தூக்கியிலிருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாதுஷா. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரம்ஜான் பீவி. இவா் பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் முகமது ஆசிப் (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6- ஆம் வகுப்பு முடித்து, 7- ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தாா்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டதால், உறவினா் ஒருவா் முகமது ஆசிப்பை தான் பணிபுரியும் சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் உள்ள அச்சகத்துக்கு அழைத்துச் சென்றாா். அப்போது அச்சகத்தில் காங்கிதங்களை மாடிக்கு ஏற்றிச் செல்ல அமைக்கப்பட்டிருந்த மின் தூக்கியில் ஏறி விளையாட்டிக் கொண்டிருந்த போது, முகமது ஆசிப் அதிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதையடுத்து, அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது, அங்கிருந்த மருத்துவா் முகமது ஆசிப் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருள்விஜயன் ... மேலும் பார்க்க