மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருள்விஜயன் (35). கூலித் தொழிலாளியான இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசி சாலையில் ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியினா் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து தென்காசி மாவட்டம், செந்தட்டியாபுரம் புதூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெயச்சந்திரன் (55) மீது சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.