செய்திகள் :

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இனிப்பான செய்தி, வெகுவாகக் குறைகிறது எக்ஸிட் லோட்!

post image

பொதுவாக, ஒரு துறையில் புதிய நிறுவனம் வரும்போது சிலபல அதிரடி சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற நினைக்கும்.

அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சமீபத்தில் நுழைந்த ஜியோ பிளாக்ராக் நிறுவனம், தான் நிர்வகித்து நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு எக்ஸிட் லோடு இல்லை என்று அறிவித்தது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

எக்ஸிட் லோடு என்பது ஒரு ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப எடுக்கும்போது விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.

உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை ஓராண்டு காலத்துக்குள் திரும்ப எடுக்கும்போது 1% எக்ஸிட் லோடு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும்போது எக்ஸிட் லோடு செலுத்த வேண்டும்.

ஆனால், சமீபத்தில் இந்தத் துறைக்கு வந்த ஜியோ பிளாக்ராக் நிறுவனம் தான் நிர்வகித்து நடத்தும் ஃபண்ட் திட்டங்களுக்கு எக்ஸிட் லோடு என்று அறிவித்ததைத் தொடர்ந்து, பிற ஃபண்ட் நிறுவனங்களும் தங்களது ஃபண்ட் திட்டங்களுக்கான எக்ஸிட் லோடு காலத்தைக் குறைத்திருக்கின்றன.

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தனது பங்குச் சந்தை மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை 30 நாள்களுக்குள் திரும்ப எடுத்தால், அதற்கான எக்ஸிட் லோடு கட்டணத்தை 0.50 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

Emergency exit

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 30 நாள்களுக்குள் பணத்தைத் திரும்ப எடுத்தால், 0.25%, 90 நாள்களுக்குள் எடுத்தால் 0.1% என்கிற அளவுக்கு எக்ஸிட் லோடு கட்டணத்தைக் குறைத்துள்ளது.

இதே போல, சாம்கோ நிறுவனம் லார்ஜ் மற்றும் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளுக்கான எக்ஸிட் லோட் காலத்தை ஒரு ஆண்டில் இருந்து 30 நாள்களாகக் குறைத்துள்ளது.

டி.எஸ்.பி. ஆர்பிட்ராஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் காலம் 30 நாளில் இருந்து 15 நாளாகவும், கோடக் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் லோட் காலம் ஒரு ஆண்டில் இருந்து 185 நாள்களாகவும், யு.டி.ஐ பேலன்ட்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் லோடுக்கான காலம் ஒரு ஆண்டில் இருந்து 90 நாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

எக்ஸிட் லோடுகளுக்கான கால அளவையும் கட்டணத்தையும் குறைத்திருப்பது ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான். குறுகிய காலத்துக்குள் எதிர்பாராத வகையில் முதலீட்டைத் திரும்பப் பெற நினைப்பவர்கள், எக்ஸிட் லோடு என்கிற வகையில் சில ஆயிரங்களை இழப்பது இனி இருக்காது.

பணம்
பணம்

ஆனால், எக்ஸிட் லோடு கட்டணம் இனி பல ஃபண்ட் திட்டங்களில் இருக்காது என்கிற நிலையில், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை அடிக்கடி திரும்ப எடுக்கும் நிலை உருவாகும். இதனால் நீண்ட நாள் முதலீடு என்கிற நோக்கம் அடிபட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் பவர் ஆஃப் காம்பவுண்டிங் பாதிப்புக்கு உள்ளாவதுடன், நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்கும் வாய்ப்பையும் இழக்க வேண்டிய நிலை உருவாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எக்ஸிட் லோடு கட்டணம் இல்லை அல்லது குறைந்துவிட்டது என்பதற்காக பணத்தை அடிக்கடி எடுக்க நினைக்கக் கூடாது. நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் பெரும் பணத்தைச் சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்!

Retirement: ஒரு தவறான முடிவு, ஓய்வுக் காலத்தையே மாற்றிவிடும்; நீங்க அதைச் செய்றீங்களா?

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஓர் இளைஞர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.''சார், எனக்கு இப்போது 26 வயசு. சம்பளம் ரூ.40,000. ஓய்வுக்காலத் திட்டமிடல் பத்தி எல்லாரும் சொல்றாங்க. ஆனா இப்போதைக்கு கார் வாங்கணும... மேலும் பார்க்க

Gold Rate: தாறுமாறான தங்க விலை ஏற்றம், இந்தியர்கள் அதிகம் வாங்குவதுதான் காரணமா?

தங்கம் விலைதங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு சுமார் 2600 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலை தற்போது 3... மேலும் பார்க்க

தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் பிளான் வேணுமா?

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது தீபாவளி. தீபாவளி வருகிறது என்றவுடன் எல்லோரும் மனத்தில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கிவிடும். அதே சமயம், சிலருக்குக் கவலைய... மேலும் பார்க்க

பணப் பற்றாக்குறையிலிருந்து நிரந்தர விடுதலை - ஈஸியான கைடுலைன் இதோ! | Labham

நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல கஷ்டங்களுக்குக் காரணம், நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்வது என்கிற கணக்கு இல்லாமல் செ... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் நீட்டிப்பு; இன்று (செப்.16) கடைசி நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுவழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக நேற்று செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு புதிதா... மேலும் பார்க்க

ITR Filing 2025: இன்றே கடைசி நாள் - தாக்கலின் போது செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், சலுகைகள்!

இன்று வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கான கடைசி நாள்.'ஐயோ...' கடைசி நாள் வந்துவிட்டதே... இன்னும் செய்யவில்லையே... என்ன செய்வது? என்கிற குழப்பமும், பயமும் வேண்டாம். வருமான வரிக் கணக்குத் தாக்கல் எப்படி ... மேலும் பார்க்க