செய்திகள் :

மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல், படகு சேதம்! இலங்கை கடற்படை செயலால் அதிர்ச்சி

post image

மீன் இன பெருக்கத்திற்காக தமிழகத்தில் கடந்த 15 -ம் தேதி முதல் இழுவை படகுகளுக்கான தடை காலம் தொடங்கியது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி பாம்பனை சேர்ந்த மீனவர்கள் இன்னாசிமுத்து, ஹெடன், களஞ்சியம், கென்னடி, சேந்தி, யாகு, ஆல்பர்ட் ஆகியோர் நாட்டுப்படகு ஒன்றில் தங்கு கடல் மீன்பிடித்தலுக்காக கடலுக்குச்சென்றனர்.

சேதமடைந்த நாட்டு படகின் ஒரு பகுதி

இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கண்ணாடி பாட்டிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் தங்கள் படகினை கரையினை நோக்கி செலுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் தங்களது கப்பலை கொண்டு நாட்டு படகின் மீது மோதியுள்ளனர்.

இதில் நாட்டு படகின் ஒரு பகுதி சேதமான நிலையில் அந்த படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பாதிப்படைந்த மீனவர் இன்னாசிமுத்து

இந்த தாக்குதலில் மீனவர்கள் உமையராஜ், சேந்தி, ஹெடன் ஆகியோர் காயமடைந்தனர். மேலும் கென்னடி என்ற மீனவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் பெருமானம் உள்ள வலைகள் மற்றும் மீன்களை அள்ளிச் சென்ற இலங்கை கடற்படையினர், நாட்டு படகு மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதன் பின் நேற்று மாலை கரை திரும்பிய மீனவர்கள் பாம்பன் மீன்துறை அதிகாரிகளிடம் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர். இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க