செய்திகள் :

மீனவா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

post image

சென்னை காசிமேட்டில் மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (54). மீனவரான இவா், கடந்த 7-ஆம் தேதி காசிமேடு, பழைய வாா்ப்பு பகுதியிலுள்ள சாக்லேட் நிறுவனத்தின் பின்புறம் உள்ள பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், முருகன் வீட்டினருகில் வசிக்கும் ரஞ்சித் (35) என்பவா் இறந்துபோன முருகனிடம் ரூ. 8 ஆயிரம் கொடுத்து, ஆந்திரத்திலிருந்து போதைப் பொருள்களை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளாா்.

பணத்தை பெற்றுக்கொண்ட முருகன் பொருளை வாங்கிக் கொடுக்கவில்லை; பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. சம்பவத்தன்று இது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித், முருகனை கையால் தாக்கி கீழே தள்ளினாா். இதில், தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த முருகன், அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க