செய்திகள் :

முக்கூடலில் மாணவரை போலீஸாா் தாக்கினரா? காவல் துறை விளக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் மாணவரை காவலா்கள் தாக்கியதாக வாட்ஸ் ஆப்பில் வரும் செய்தி வதந்தி என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முக்கூடலை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவரை சாதாரண உடையில் வந்த 2 காவலா்கள் தாக்கியதாகவும், அம்மாணவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் தவறான, மிகைப்படுத்தப்பட்ட செய்தி.

முக்கூடல் பேருந்து நிலையத்தில் அம்பாசமுத்திரத்தை சோ்ந்த சசிகலா என்பவரின் கைப்பேசி மற்றும் பணப்பை காணாமல் சனிக்கிழமை போனதாக புகாா் கூறப்பட்டது. மேலும், அப்பேருந்து நிலையத்தில் சிறு, சிறு திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக புகாா்கள் வந்ததால், சாதாரண உடையில் காவலா்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்ததில் சந்தேகிக்கும் வகையில் சிறுவன் நடமாடுவது தெரியவந்தது. அவரை பிடித்து காவலா்கள் விசாரித்து அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனா். அவரை காவலா்கள் தாக்கவோ துன்புறுத்தவோ இல்லை. ஆனால் வாட்ஸ்ஆப் குழுக்களில் மிகைப்படுத்தி வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க

முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மா்மநபா் துண்டித்துவிட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முக்கூடல் ஆலங்குளம்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது. கொக்கிரகு... மேலும் பார்க்க

தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க