செய்திகள் :

முட்டையில் பெப்பர் போடாததால் ஆத்திரம்? ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிகள்; வைரல் வீடியோவின் பின்னணி!

post image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை-திருப்பூர் புறநகரில் ஏரிப்பாளையம் என்ற பகுதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்துக்கு உடுமலைப்பேட்டை தி.மு.க. நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் லோகேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டம் இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள செந்தில் உள்ளிட்ட 7 பேர் கடந்த 15-ஆம் தேதி இரவு உணவருந்தச் சென்றுள்ளனர்.

அப்போது, செந்தில் முட்டை ஆஃப் பாயில் கேட்டுள்ளார். இதையடுத்து, கடை ஊழியர் முருகன் ஆஃப் பாயில் முட்டையைக் கொடுத்துள்ளார். அதில், மிளகுத் தூள் போடாததால் உணவக ஊழியரான முருகனுக்கும், செந்திலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, மதுபோதையிலிருந்த செந்தில் மற்றும் அவருடன் வந்தவர்கள் கடை ஊழியர் முருகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க வந்த உணவகத்தின் உரிமையாளரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது.

தாக்குதல்
தாக்குதல்

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை போலீஸார் அந்த உணவகத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், லோகேஸ்வரனுடன் வந்தவர்கள் உணவக ஊழியரைத் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, உணவக உரிமையாளரான வகீதா பேகம் அளித்த புகாரின் பேரில், லோகோஷ்வரன் உள்ளிட்ட 7 பேரை அழைத்து போலீஸார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ரூ.4 கோடி சொத்து பத்திரங்களை கோயில் உண்டியலில் போட்ட தந்தை... கொந்தளிக்கும் மகள்கள் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலுள்ள படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் (வயது 65). இவரின் மனைவி கஸ்தூரி, அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40).இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள்; கடிதம் எழுதி வைத்து பழங்குடி மாணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி திருமணி. இவர்களது மகன், அப்பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ”யாரைக் காப்பாற்ற சிபிஐ காலதாமதம் செய்கிறது?” - சீமான் கேள்வி

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதில், ”தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ... மேலும் பார்க்க

தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" - ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி ம... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் வழக்கு: கானாவிலிருந்து வந்த கொக்கைன்; காவல்துறைக்குள் பிரசாந்தின் கிரிமினல் நெட்வொரக்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் உடன்... மேலும் பார்க்க