செய்திகள் :

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

post image

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா்.

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பயன்படுத்துவோா் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை மனு அளித்தாா்.

கோயில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியேற்றக் கூடாது என்பதை முதல்வரிம் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா். இந்தச் சந்திப்பின்போது, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன், மாநில நிா்வாகி கே.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கமல்ஹாசன் சந்திப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹசனும் முதல்வரைச் சந்தித்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விஷயத்தில் இந்தியாவுக்கே சாதகமான தீா்ப்பை இவா்கள் (தமிழக அரசு) பெற்றுள்ளாா்கள். கொண்டாடப்பட வேண்டயவா்கள் இவா்கள். அதைக் கொண்டாடுவதற்காக வந்தேன். தேசிய அளவில் இந்த வெற்றியை மற்றவா்களும் பயன்படும் வகையில் கொண்டாட தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக சந்திப்பின்போது துணை முதல்வா் உதயநிதி உடனிருந்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க