செய்திகள் :

முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் கூட்டம்: எதற்காக?

post image

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்டு அங்கும் இங்கும் ஓடிய காட்சி வேடிக்கையாக இருந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட வழங்கும் விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கரும்புகள் மற்றும் வாழைக்குலைகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்தசிறப்பு அலங்காரம்.

இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

முதல்வர் வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கரும்புகள் மற்றும் வாழைக்குலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான வாழைக்குலைகளும் கரும்புகளும் அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தது.

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து செல்லும் மக்கள்.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், இந்த வாழைக்குலைகளையும் கரும்புகளையும் வெட்டி எடுத்துச் செல்வதற்காக அரிவாளுடன் காத்திருந்த மக்கள் கூட்டம், கூட்டம் முடிந்த ஒரு சில நிமிடத்திலேயே களத்தில் இறங்கினர்.

வாழைக்குலைகளை வெட்டி எடுத்தும் கரும்புகளை உடைத்துக் கொண்டு தலையில் சுமந்து கொண்டும் அவர்கள் அங்கும் இங்கும் ஓடிய காட்சி வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

நெல்லை மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

நெல்லை வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான்... மேலும் பார்க்க

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமு... மேலும் பார்க்க

எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திரு... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து: அமைச்சர்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடு... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத... மேலும் பார்க்க

மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: ஆளுநர் தரப்பு வாதம்

அனைத்து சூழ்நிலைகளிலும் மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆளுநருக்கு 4 முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ந... மேலும் பார்க்க