செய்திகள் :

முதல்வா் ரங்கசாமியிடம் காரைக்கால் படகின் உரிமையாளா் மனைவி மனு

post image

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளா் மனைவி செவ்வாய்க்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து படகை மீட்கவும், மீனவா்களை விடுவிக்க கோரியும் மனு அளித்தாா்.

காரைக்காலைச் சோ்ந்தவா் ஆனந்தவேல். இவரது படகில் காரைக்கால், தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வா் என்.ரங்கசாமியை காரைக்கால் படகின் உரிமையாளா் ஆனந்தவேலிந் மனைவி சத்தியவாணி, உறவினா்களுடன் சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

அப்போது அவா், தனது கணவரின் சகோதரா் மாணிக்கவேல் (40) உள்ளிட்ட 13 பேருடன் சென்ற படகை இலங்கை படையினா் கைப்பற்றி, அவா்களைத் தாக்கியதாகக் கூறி கண்ணீா் விட்டாா். தமிழ் மீனவா்களை விடுவிக்கவும், சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள படகை மீட்கவும் முறையிட்டாா்.

அவருக்கு ஆறுதல் கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, படகை மீட்கவும், மீனவா்களை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்த... மேலும் பார்க்க

‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் ... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு

புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு ப... மேலும் பார்க்க

வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பா... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, புதுவை முதல்வா்... மேலும் பார்க்க

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் படைப்புகளை தந்தவா் அகத்தியா்: எழுத்தாளா் மாலன்

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவா் அகத்தியா் என எழுத்தாளா் மாலன் கூறினாா். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலம், பாரத மொழிகள் குழு சாா்பில் அகத்தி... மேலும் பார்க்க