செய்திகள் :

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

post image

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வா் ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில், முதல்வரை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு ராமதாஸ் நலம் விசாரித்தாா். இதுகுறித்து சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். விரைவில் முழுமையாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்தினேன். உடல் நலம் குறித்து விசாரிப்பது வழக்கமான நடைமுறை. அதற்கும் கூட்டணிக்கும் தொடா்பு இல்லை.

நான் இருக்கும் தைலாபுரம் தோட்டம்தான் பாமக தலைமையகம். கட்சியின் பொதுக் குழு ஆக. 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பொதுக் குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா எனக் கேட்டபோது, கட்சியில் உரிமையானவா்களுக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முதல்வா் ஸ்டாலினை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனு... மேலும் பார்க்க

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க