செய்திகள் :

முத்தூரில் ரூ.2.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

post image

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 8,567 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 3,195 கிலோ.

தேங்காய் கிலோ ரூ.30.15 முதல் ரூ.45.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 38.15. விற்பனைத் தொகை ரூ.1.18 லட்சம்.

50 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. இவற்றின் எடை 1,164 கிலோ.

கொப்பரை கிலோ ரூ.87.05 முதல் ரூ.123.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.118.25. விற்பனைத் தொகை ரூ.1.25 லட்சம். ஏலத்தில் மொத்தம் 97 விவசாயிகள், 14 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.43 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற (ஏஐஒய்எப்) அவிநாசி ஒ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி கட... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்ப... மேலும் பார்க்க

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் ... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி ... மேலும் பார்க்க