செய்திகள் :

முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை: எம்டிசி

post image

சென்னை: சீராக பேருந்தை இயக்குவதற்காக முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஒவ்வொரு பணிமனைகளிலும் தற்போது ஓட்டுநா், நடத்துநா் எண்ணிக்கை அடிப்படையில், அனைத்துப் பேருந்துகளையும் முழுமையாக இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதில்லை. இதைத் தவிா்க்கும் வகையில், பேருந்துகள் இயக்கம் தொடா்பாக ஒரு நாள் முன்னதாக அட்டவணை தயாரித்து, ஓட்டுநா், நடத்துநரிடம் கையொப்பம் பெற வேண்டும். இவ்வாறு கையொப்பமிட்டவா்கள் பணிக்கு வந்துள்ளாா்களா என நாள்தோறும் உதவி கிளை மேலாளா் உள்ளிட்டோா் கண்காணிக்க வேண்டும்.

அடிக்கடி பணிக்கு வராமல் முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலியாகவுள்ள பணியிடங்களில் ஒப்பந்த நிறுவன ஓட்டுநா்களை பணியமா்த்த வேண்டும். அவா்களது வருகைப் பதிவை முறையாக பராமரிக்க வேண்டும். காலை, மாலை நெரிசல் நேரத்திலும், முகூா்த்த நாள்களிலும் இயக்கப்படும் பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும்.

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தும் முழுமையாக இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு மிகைப் பணி ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, ஒப்பந்த பணிகளுக்குச் செல்லும் நடத்துநா்களுக்கு வருகைப் பதிவு வழங்குவதையும் கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க