அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
முன்னாள் எம்எல்ஏ வேல்துரை நினைவேந்தல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கங்கனாங்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரையின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வேல்துரையின் நினைவிடத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவா் கே. சங்கர பாண்டியன், கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் மோகன் குமாரராஜா, முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.பி. துரை மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.