செய்திகள் :

மும்பையில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை!

post image

மும்பையில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,

மும்பையில் தற்போது வெப்பநிலை இயல்பை விட ஆறு முதல் ஏழு டிகிரி வரை அதிகமான இருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், இது 5 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.

நகரம் முழுவதும் அதிகப்படியான வெப்பநிலையும், பிற்பகலுக்கு மேல் 36 டிகிரிக்கு மேல் நிலவும் வெய்யிலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மும்பை, தாணே, பல்கர் மற்றும் நவி மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் இயல்பை விட அதிகரிக்கும். மேலும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட்டின் கூற்றுப்படி,

மும்பையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். கடல் காற்று தாமதமாகத் தொடங்குவது மும்பையின் வெப்பநிலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, கடல் காற்று நண்பகலில் தொடங்கி, பகல்நேர வெப்பநிலையைச் சீராக்க உதவுகிறது.

இருப்பினும், கடல் காற்று ஒரு மணி நேர தாமதமாவதால், வெப்பநிலை 2-3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். கடந்த சில நாள்களாக, பிற்பகல் நேரங்களில், வடகிழக்கு திசையிலிருந்து வீசும் வெப்பக் காற்று, தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறது.

செவ்வாய்க்கிழமையான இன்று மும்பையில் வெப்பநிலை 36 டிகிரி, அதற்கு மேல் பதிவாகும். அதிக ஈரப்பதம் அசௌகரியத்தை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதி நாள்களில் மும்பை மக்கள் அதிகப்படியான வெப்பத்தை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க