செய்திகள் :

மும்பை அணு ஆராய்ச்சி மையம்: 14 வரைபடங்கள், அணு ஆயுத தகவலுடன் சிக்கிய மர்ம நபர் யார்? - பகீர் பின்னணி

post image

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் கடந்த வாரம் விஞ்ஞானி என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் அக்பர் குத்புதின் உசைனி என்று தெரியவந்தது.

விசாரணையில் அவர் விஞ்ஞானி அல்ல என்பது உறுதியானது. அவரிடம் அணு ஆயுதம் தொடர்பான தகவல்கள் மற்றும் 14 வரைபடங்கள் இருந்தன. அவற்றை போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல போலி பாஸ்போர்ட்கள், ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி என்பதற்கான போலி அடையாள அட்டையும் வைத்திருந்தார். அதில் அவரது பெயர் அலி ராசா உசைனி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தவிர, அலெக்சாண்டர் பார்மர் என்ற பெயரிலும் அவரிடம் அடையாள அட்டை இருந்தது.

அவரை விசாரித்ததில், கடந்த சில மாதங்களில் பல வெளிநாடுகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்புகள் மேற்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும், அந்த அமைப்புகள் அணு ஆயுதம் தொடர்பான கட்டுரைகள் வழங்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பகீர் பின்னணி
பகீர் பின்னணி

மேலும், உசைனி அடிக்கடி தனது அடையாளத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டு வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட உசைனி, அதன் பிறகும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபாய் மற்றும் தேஹ்ரான் போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார்.

ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த உசைனி, கடந்த 1996-ம் ஆண்டிலேயே தனது வீட்டை விற்றுவிட்டார். ஆனால் அதன் பிறகும் அதே வீட்டு முகவரியைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், உசைனி தனது சகோதரர் அடில் உசைனி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனாசில் கான் என்பவரும் உதவி செய்துள்ளார்.

வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. கோவைலோகேந... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். ... மேலும் பார்க்க

கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இ... மேலும் பார்க்க

திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி மன்ற 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினராக உள்ளவர் சாந்தி. இவரது கணவர் ராஜேந்திரன் (45). சொந்தமாக இருசக்கர வாகனம் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில், இவர... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி - வீடியோவால் அதிர்ச்சி

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க