செய்திகள் :

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

post image

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.

இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக்கமான வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. இதனால் பெண் பைலட் சந்தேகப்பட்டார். நடுவழியில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார்.

அவர்கள் டாக்சியில் இருந்த பெண் பைலட்டை பாலியல் தொந்தரவு கொடுத்தனர். உடனே அப்பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் இரண்டு பேரில் ஒருவன் அப்பெண்ணை மிரட்டினார். அதற்குள் போலீஸ் செக்போஸ்ட் ஒன்றை டாக்சி நெருங்கியது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனால் போலீஸ் செக்போஸ்ட்டிற்கு முன்பாகவே ஓட்டுநர் வண்டியின் வேகத்தைக் குறைத்தார். உடனே நடுவழியில் ஏறிய இரண்டு பேரும் இறங்கி ஓடிவிட்டனர். பெண் பைலட் போலீஸ் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் டாக்சி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெண் பைலட் தான் கொடுத்துள்ள புகாரில், ''எனது கணவரை சர்ச்கேட் ரயில்நிலையத்தில் இரவில் பார்க்கச் சென்று இருந்தேன். அவர்தான் டாக்சியை மொபைல் ஆப் மூலம் புக் செய்தார். இரவு 10.45 மணிக்கு டாக்சியில் ஏறிச் சென்றபோது ஓட்டுநர் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழியில் சென்றார்.

திடீரென நடுவழியில் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார். அதில் ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் பின்புறம் எனது அருகில் ஏறிக்கொண்டார். எனது அருகிலிருந்த நபர் எனது ஒரு கையைப் பிடித்தார்.

உடனே நான் கத்தினேன். முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அமைதியாக இருக்கும்படி என்னை மிரட்டினார். அந்நேரம் என்னுடன் இருந்த நபர் மெதுவாகக் கையை எனது தொடையை நோக்கிக் கொண்டு வந்தார். ஓட்டுநர் எதுவும் சொல்லாமல் இருந்தார். அந்நேரம் சாலையோர போலீஸ் செக்போஸ்ட் வந்தது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

உடனே இரண்டு பேரும் இறங்கிச் சென்றுவிட்டனர். அந்நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. நான் எனது வீட்டிற்குச் சென்றதும் ஓட்டுநரிடம் இரண்டு பேரும் யார் என்று கேட்டேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

மறுநாள் அவர் தனது கணவரோடு சென்று இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டாக்சி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் கு... மேலும் பார்க்க

வால்பாறை 4 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை; தேடுதல் பணியில் அதிர்ச்சி... கண்ணீரில் குடும்பம்

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அண்மை காலமாகவே அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புல... மேலும் பார்க்க

குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த துரைசாமி - தனலெட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ்(22). இவர் குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதிலுள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்: இந்து முன்னணிக்கு போலீஸ் ஆதரவு? சிபிஎம் போராட்டம்; பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் கு... மேலும் பார்க்க

கரூர்: காதல் திருமணம் செய்த இளஞ்ஜோடி; வீட்டுக் காவலில் மணமகன்; மணப்பெண் கண்ணீர்; பின்னணி என்ன?

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சதயவர்த்தினி (வயது: 19). இவரும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது: 21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து... மேலும் பார்க்க