செய்திகள் :

மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" - மிரட்டிய காதலியைக் குத்திக் கொன்ற காதலன்

post image

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு சித்ரவதை செய்த காதலியைக் காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் சீமா காம்ப்ளே (42). இப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார். சீமா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தனக்கு இருக்கும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி தனக்குக் கடன் கொடுக்கும்படி சீமாவிடம் ராகுல் கேட்டுள்ளார். சீமாவும் ரூ.2.5 லட்சம் கடனாகக் கொடுத்தார். நாளடைவில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடு அல்லது என்னைத் திருமணம் செய்து கொள் என சீமா தெரிவித்தார். ஆனால் ராகுல் பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. அதேசமயம் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இல்லை. அங்குள்ள சாய்பாபா கோயில் அருகே இருவரும் சந்தித்துக்கொண்டபோது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொலை
கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராகுல் தன்னிடம் இருந்த கத்தியால் சீமாவைச் சரமாரியாகக் குத்தினார். அங்கு நின்றவர்கள் இதனைத் தடுக்க முயன்றனர். உடனே அவர்களையும் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டினார் ராகுல். ராகுல் சரமாரியாகக் குத்தியவுடன் சீமா ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனே சம்பவ இடத்திலிருந்து ராகுல் தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்து கிடந்தவரை அங்குள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் சீமா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராகுலைக் கைது செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பணம் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே சீமா போலீஸிலும் புகார் செய்திருந்தார். ஆனாலும் ராகுல் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க