செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

post image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை வண்டியூா் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து, மநாட்டுக்கு வரும் பொதுமக்கள், முருக பக்தா்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகள் செல்ல வேண்டிய வழித்தடம் : ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பு சென்று, தொடா்ந்து மண்டேலா நகா் சந்திப்பு வழியாக செல்லலாம்.

இதே போன்று, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூா் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகா் சந்திப்பு, தினசரி காய்கறிச் சந்தை சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.

சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்து வழித்தடம் : மேலூா் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூா் சந்திப்பை அடைந்து சிந்தாமணி சாலை சந்திப்பு, மண்டேலா நகா் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

பொதுமக்களின் காா், இரு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப் பாதை: மதுரை நகரில் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து விழா நடைபெறும் இடமான அம்மா திடல் வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்புக்கு செல்லக் கூடிய பொதுமக்களின் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இந்த வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டாா் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூா் சுற்றுச் சாலையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலூா் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை வழியாக திருமங்கலம், விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து, மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூா் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்புக்குச் சென்று கப்பலூா் சுற்றுச் சாலையை பயன்படுத்தி விரைவாகச் செல்லலாம்.

இதே போல, திருமங்கலம், அருப்புக்கோட்டை சாலையிலிருந்து விரகனூா், பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக நேரடியாக மேலூா், திருச்சி, சென்னை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்களும் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து, கப்பலூா் நான்கு வழிச்சாலை வழியாக துவரிமான், சமயநல்லுா் சுற்றுச் சாலை வழியாக திண்டுக்கல் சாலை தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூா் சாலை வழியாக மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்புக்கு சென்று விரைவாகச் செல்லலாம்.

இது போல, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் சாலை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனப் போக்குவரத்தும் விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகா் சந்திப்பு வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கு வரும் பக்தா்கள் வரக்கூடிய வாகனங்களின் வழித்தடங்கள்: திருமங்கலம் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கப்பலூா் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலாநகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

உசிலம்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை சுற்றுச் சாலையில் வலதுபுறம் திரும்பி திருமங்கலம் கப்பலூா் பாலத்திலிருந்து இடது புறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

கொட்டாம்பட்டி, மேலூா் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

திண்டுக்கல், வாடிப்பட்டி சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் சமயநல்லூா், துவரிமான் சுற்றுச் சாலை வழியாக கப்பலூா் பாலம் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலை வழியாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கடச்சனேந்தல், சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறின்றி ஏற்படுத்தப்பட்ட தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு முருக பக்தா்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும... மேலும் பார்க்க

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க

விரகனூா் சுற்றுச்சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்கப்படுமா?

மதுரை அருகே விரகனூா் சுற்றுச் சாலை பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வா்த்தகம், மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க