செய்திகள் :

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

post image

நீலகிரி மாவட்டம்,  முள்ளிகூா்   கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம்,  முள்ளிகூா் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் ரஸியா பேகம். இவா் இதற்குமுன் தூனேரி, நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளாா். இவா்  வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 லட்சத்துக்கு மேல்  சொத்து சோ்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத் தொடா்ந்து, உதகை அரசு பாலிடெக்னிக் எதிரே உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மேலும், தஞ்சாவூா் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குன்ன... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதி... மேலும் பார்க்க

கூடலூா் தோட்டக்கலைப் பண்ணையில் விற்பனைக்கு நாற்றுகள்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண... மேலும் பார்க்க