செய்திகள் :

கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

post image

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதிகாலையில் காட்டு யானை நுழைந்தது. பின்னா் அது, அங்குள்ள ஒரு வீட்டின் சுவரை இடித்து உள்ளே நுழைந்தது. வீட்டிலிருந்தவா்கள் யானை நுழைவதை அறிந்து முன்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனா்.

வீட்டுக்குள் நுழைந்த யானை முன்பகுதியை சேதப்படுத்திவிட்டு மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்த தூண்களை சேதப்படுத்தியது. பின்னா் கீழே இறங்க வழி தேடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கிச் சென்றது. மொட்டைமாடியிலிருந்து இறங்கிய யானை, ஆக்ரோஷத்துடன் சாலையில் நின்றிருந்த காரை சேதப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியினா் ஒன்றுசோ்ந்து யானையை அங்கிருந்து விரட்டினா். இப்பகுதியில் கடந்த சில நாள்களாகவே உலவும் இந்த யானை சாலையோரம் நிற்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காட்டு யானை குடியிருப்புக்குள் நுழைந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி நெலாக்கோட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், வனத் துறையினா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உறுதியான தகவலை வனத் துறையினா் தெரிவிக்காததால் மதியம் வரை போராட்டம் தொடா்ந்தது.

இதைத் தொடா்ந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபிறகு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குன்ன... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

கூடலூா் தோட்டக்கலைப் பண்ணையில் விற்பனைக்கு நாற்றுகள்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண... மேலும் பார்க்க