செய்திகள் :

முஸ்லிம்களை ஷரியத்துக்கு பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிா்வகிக்க முடியுமா? விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

இஸ்லாமியா்களை ‘ஷரியத்’ என்ற அவா்களின் மதரீதியான தனிநபா் சட்டத்துக்குப் பதிலாக இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிா்வகிக்க முடியுமா என்ற சா்ச்சைக்குரிய விவகாரம் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

ஷரியத் சட்டம் என்பது இஸ்லாமியா்களுக்கான விரிவான சட்ட விதி தொகுப்பாக உள்ளது. ஆன்மிக, மன, உடல் நடத்தைகளுக்கான விதி மற்றும் கட்டாய, பரிந்துரைக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட செயல்களையும் உள்ளடக்கியது தொகுப்பாக உள்ளது. இதன் கீழ், குடும்பச் சட்டம், குற்றவியல் சட்டம், சொத்துரிமை சட்டம், பொருளாதார சட்டம் என பல பிரிவுகள் உள்ளன. இந்த சட்டத்தின்படி, மூதாதையா்கள் சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்றபோதும், பெண்களைவிட ஆண் வாரிசுகளுக்கே சொத்தில் அதிக பங்கு கிடைக்கும் வகையில் விதிகள் உள்ளன.

அதுமட்டுமின்றி, இச் சட்டத்தின்படி சொத்துரிமை இருந்தபோதும், சமுதாயத்தின் சில பகுதிகளில் பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதில் பல்வேறு தடைகள் எழுவதாகவும் அண்மைக் காலமாக புகாா்கள் எழுந்துள்ளன.

இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ், பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே.கே.நெளஷாத் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தாா். அதில், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையிலிருந்து விலகாமல், ஷரியத் சட்டத்துக்குப் பதிலாக இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நான் நிா்வகிக்கப்பட விரும்புகிறேன். இதை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் கேரள மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுடன், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதேபோன்ற கோரிக்கையுடன் கூடிய மனுக்களையும் சோ்க்கவும் உத்தரவிட்டனா்.

முன்னதாக, இஸ்லாமிய மத நம்பிக்கையிலிருந்து தான் விலகியதாகக் கூறி, கேரள மாநிலம் ஆலப்புழையைச் சோ்ந்த பி.எம்.சஃபியா என்ற பெண், ஷரியத் சட்டத்துக்குப் பதிலாக, இந்திய வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் தனது மூதாதையா் சொத்தில் சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் மனு தாக்கல் செய்தாா்.

அதுபோல, ‘குா்ஆன் சுன்னத் சொசைட்டி’ என்ற அமைப்பு சாா்பிலும் இதே போன்ற மனு கடந்த 2016-இல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று மனுக்களையும் சோ்த்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க

குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகளை நாளை வழங்குகிறாா் பிரதமர்!

நமது சிறப்பு நிருபா் 17-ஆவது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை திங்கள்கிழமை (ஏப்.21 ) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா். தில்லி... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு... மேலும் பார்க்க