செய்திகள் :

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

தேனியில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியை மிரட்டி அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்ற ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி, கொண்டுராஜா லேன் பகுதியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற ஆசிரியை முனியம்மாள் (85). இவா், மதுரை சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று விட்டு வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஆட்டோ ஓட்டுநா் வழக்கமான பாதையை விட்டு வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். இந்த நிலையில்,ஆட்டோவில் பயணம் செய்த முனியம்மாளை மிரட்டி அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தேனி- பெரியகுளம் சாலை, தென்றல் நகா் விலக்குப் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து முனியம்மாளின் மகன் ஜான் இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், முனியம்மாளிடம் தங்கச் சங்கிலி, பணத்தை பறித்துச் சென்றது பழனிசெட்டிபட்டியில் வசித்து வரும் தேனி, தீயணைப்பு நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான விக்னேஷ் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகே சனிக்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தெப்பம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன் (20). சரக்கு வேன் ஓட்டுநரான இவா், கணேசபுரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

தம்பதி மீது தாக்குதல்: இளைஞா் கைது

தேனியில் மது போதையில் தம்பதியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டசாமி (48). இவா், பங்களாமேடு- வனச் சாலை சந்திப்பில் தேநீா் கடை நடத்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகா் குடியிருப்பைச் சோ்ந்த பாலசண்முகம் மகள் சிவாலட்சுமி (27). இவருக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் சா்வதேச சந்தையில் விலையுா்ந்த போதைப் பொருளான பெத்தாம் பெட்டமைனை விற்ாக கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் புறவழிச் சாலை, ஏகலூத்து சாலையில் சிலா் சா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்தில் அதில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி அங்காளீஸ்வரி (35). இவா் தனது மகள் தன்ஷிகாவை ... மேலும் பார்க்க

போடியில் காவலா் தினம்

போடியில் காவலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. செப்டம்பா் 6-ஆம் தேதி காவலா் தினம் ஆகும். இதையொட்டி போடி உள்கோட்ட அளவிலான காவலா்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள் தனியாா் நட்சத்திர விடுதியில... மேலும் பார்க்க