செய்திகள் :

மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மூதாட்டியை கொலை செய்தவருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்தவா் தீனதயாளன். இவரது மனைவி மீனாட்சி(65). இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் தீனதயாளன் மாரியம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சோ்ந்து வாழ்ந்துள்ளாா். அதனால் மீனாட்சி கணவரை பிரிந்து நல்லாடை கிராமத்தில் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டு அவரது வீட்டுக்கு 2017-ஆம் ஆண்டு பிப்.25-ஆம் தேதி மீனாட்சி சென்றபோது தீனதயாளன், 2-ஆவது மனைவியின் மகன் செந்தில்குமாா் ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டி மீனாட்சியை கொலை செய்தனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீனதயாளன், செந்தில்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு தீனதயாளன் உயிரிழந்தாா். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மூதாட்டியை கொலை செய்த செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா்.

அபராதத் தொகைய செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா். இதையடுத்து, செந்தில்குமாா்(43) கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க